Friday, December 12, 2014

An Efficient Period Prediction System for Tamil Epigraphical Scripts Using Transductive Support Vector Machine. S Venkatakrishnakumar and Poornima TV.


An Efficient Period Prediction System for Tamil Epigraphical Scripts Using Transductive Support Vector Machine. S Venkatakrishnakumar and Poornima TV. in International of Advanced Research  in Computer and Communication Engineering. Vol 3 Issue 9 September 2014

It appears you don't have a PDF plugin for this browser. No biggie... you can click here to download the PDF file.



Courtesy: International of Advanced Research  in Computer and Communication Engineering. Vol 3 Issue 9 September 2014

Wednesday, December 10, 2014

Some Common Features in Six Pandya Copper Plates. Balambal, V.

Some Common Features in Six Pandya Copper Plates
கட்டுரையாளர் :
வி.பாலம்பாள் Balambal, V (Mrs) Dr [ ]
கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல்
ஆய்விதழ் எண் : 016 - December 1979  
பக்கங்கள் : 048 - 057
Download : 016048057.pdf
மேற்கோள் ( Tags ) :
சின்னமனூர் செப்பேடு சிவகாசி செப்பேடு தளவேபுரம் செப்பேடு வேள்விக்குடி செப்பேடு
ஸ்ரீவரமங்கலம் செப்பேடு




It appears you don't have a PDF plugin for this browser. No biggie... you can click here to download the PDF file.


நன்றி: உலகத் தமிழ் ஆராய்சி நிறுவனம் ஆய்விதழ் எண் 016. டிசம்பர் 1979. பக்கங்கள்: 048 - 057

Tuesday, December 9, 2014

Preparation of Administrative Terminology - The role of Earlier Inscriptions and Records. Sankaranarayanan, G.

Preparation of Administrative Terminology - The role of Earlier Inscriptions and Records
கட்டுரையாளர் :
ஜி.சங்கரநாராயணன் Sankaranarayanan, G [ An Indologist, researcher at CIIL, Mysore ]
கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல்
ஆய்விதழ் எண் : 024 - December 1983  
பக்கங்கள் : 076 - 086
Download : 024076086.pdf

It appears you don't have a PDF plugin for this browser. No biggie... you can click here to download the PDF file.


நன்றி: உலகத் தமிழ் ஆராய்சி நிறுவனம் ஆய்விதழ் எண் 024. டிசம்பர் 1983. பக்கங்கள்: 076 - 086

Thursday, December 4, 2014

S. Chandnibi’s book on Chola epigraphy fills a gap in the study of the period (A hole in the narrative) Ziya Us Salam The Hindu November 28, 2014

Dr. S. Chandnibi of Aligarh Muslim University.
Dr. S. Chandnibi of Aligarh Muslim University.
Epigraphical Reading in the Chola History 
The nine foot tall stucco statue of Nandi installed on a twelve foot pedestal about four hundred years ago stands out majestically on the baked

S. Chandnibi’s book on Chola epigraphy fills a gap in the study of the period 

Think history, think of the Mauryas, the Guptas, the Sultanate and the Mughals. Maybe, somewhere down the line sneak in a chapter on the Cholas, and a paragraph or two on the likes of the Pandeyas, the Cheras, the Vakatakas and the rest. Some though have gone beyond this lopsided approach to our history and focussed on the achievements of the Cholas, the empire that lasted more than a millennium. Many years ago, the venerable Nilakant Sastri came up with a landmark study of the Cholas. Recently, S. Chandnibi, an academic at Aligarh Muslim University, concentrated on epigraphical data from the dynasty in her book, “Epigraphical Reading in the Chola History” to reveal to us some of the evidence of the vastness of the empire. 

Beyond Nilakant Sastri, not many top historians seem to have focussed exclusively on the Cholas. Your book fills that vacuum. How challenging was it to do a book on the Cholas that goes beyond academic circles?
 
I dare not to be placed anywhere near K.A. Nilakanta Sastri. He a giant, never left a stone unturned in the field of Cholas, which itself is too big a challenge for anyone to progress further. Next handicap is the sources, where we should look to epigraphy only, as we lack literary sources as compared to contemporary north India. Among the painstakingly copied inscriptions, ASI has published little, and also the efforts of the State government are too little when compared to other neighbouring States. So one has to wait for permission 

The Cholas were renowned for local self-administration. Were they the harbingers of local self government in modern India?
 
We may say so. The ancient north Indian literature refers to republican States and two different houses of the State, viz Sabha and Samithi, and we hardly see its practicality here. But Sabha and its full fledged functions are quite obvious in the regime of the Cholas. In certain issues —irrespective of the difficulties of matching with the exact perspectives of present-day democracy — definitely we are yet to catch up with the Chola system, especially in dealing with corruption in general and politicians in particular. The most amazing aspect was their effort to maintain zero tolerance towards public corruption. Public money swindlers were debarred from contesting the elections for life. 

Could you elaborate on the Cholas’ justice system?
 
It was more practical in a certain sense, like when two brothers fought with each other and one was murdered, the other was exempted from imprisonment taking into account the aged parents left with no other sons; he was left free with a caution to guard his parents. The caste-based justice of Manu did not find routes with the Cholas’ justice. At the village level grievances were dissolved by discussion, unmindful of whether it was day or night. Traditions were given importance but overcome if documental evidence was produced. The various stages of the present system, right from filing a case to the final judgement including the right to appeal, was followed in the Chola judiciary. The king’s court was the only court of appeal. Even the Brahmins were not spared; they were imprisoned, fined, had their property confiscated and were deprived of their professional duties in the temples for generations. Special care was taken to collect the swindled public money. We do not hear about hard punishments like thrashing, being trampled under elephants and amputation. An example is the case of the murder of a prince by a group of Brahmins; the royal authority did not execute them but confiscated all their and their relatives’ property. At the same time, a very little parallel to Manu’s influence could also be felt. 

As youngsters we learn about Mauryan Emperor Ashoka’s expedition to Sri Lanka as also the Battle of Kalinga. Yet we are told little about how Raja Raja Chola I’s empire included Sri Lanka as well as Kalinga. How do you explain this dichotomy?
 
This particular question may open a Pandora’s box. The historians of north India really far exceed in the subject while the south is not yet close to them. Eventually these developments led to a mental picture that the history of north of the Vindayas is the history of the country itself. The historical writings undermined the south and used a blanket term “Indian” — though neglecting the southern touch. I can list at least 50 such books, from my very department’s library . The chapter “Feudalism in South Indian Context” of my book is self-explanatory in this context. Though scholars the world over accept that the so-called undeciphered Harappan script has links to languages of the Dravidian family, we prefer to leave it aside as undeciphered. Though the familiar division of Indian society into four on caste basis has been checked and opposed right from its initiation in the Vedic age, still the basic text books do not show this. All this implies the need for rewriting our history books with absolute objectivity. A senior historian has voiced long back that Indian history should start from the banks of river Kaveri instead of the Ganga. 

On similar lines our students are told about southern kings in one single chapter, in which the Cholas, Pandeyas, Cheras are all clubbed together despite the fact that often Cheras, Sinhalas as also the Pandeyas allied against the Cholas. Doesn’t this short shrift to an important Indian dynasty deprive our students of a more balanced representation of our past?
 
Of course, there is no other dynasty in the whole of Indian history, perhaps the universe, that has survived and continued to rule right from B.C to the 13th A.D — which includes the complete ancient period and partially the medieval one, with ups and downs, except the three, viz the Cheras, Cholas and Pandeyas. The Greek and Roman writers exhibit a sense of fear over the gold drain into these kingdoms caused by the excessive imports in the Augustus Era. The two epics of India, Ramayana and Mahabharata, do refer to them. Some of the tribes in the South East Asian islands go with the names of the three dynasties. Asokan inscriptions refer to them as neighbours, meaning they were independent of the Mauryan yoke. Kharavela of Kalinga perceived the confederation of these three dynasties as a threat. Even in Pakistan, Afghanistan and the land beyond carry these dynastical names as their place names today too. The Cholas were the first to excel in a navy and succeeded in subduing the Far East islands politically, culturally and commercially. Until the advent of the Europeans in sea commerce, the southern powers had both east and west overseas commerce in their hands. Embassies were sent to China as an extension of commerce. The dialogue can go on. 

Yes, our younger generations are deprived of a marvellous piece of their history, which is definitely very unfortunate.

The Hindu November 28, 2014

களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும் சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி சமூக ஆய்வு வட்டம்












ளப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்
சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பத்மாவதி 

நான் தொல்லியல் துறையில் மாணவியாய் சேர்ந்த போதிலிருந்தே களப்பிரர் வரலாற்றில் எனக்கு ஒர் ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதுபற்றி யோசித்தும் படித்தும் வந்தேன். ஆய்வு செய்ய நினைத்தேன்.
மு.அருணாசலம், மயிலை சீனி.வேங்கடசாமி, நடன.காசிநாதன் ஆகியோர் களப்பிரர் பற்றி எழுதிய நூல்களைப் படித்தேன். பிறர்நூல்களையும் படித்தேன்.
களப்பிரர் வரலாற்றில் அடுத்த கட்டத்திற்குப் போகமுடியவில்லை. வரலாற்றுத் தடயங்கள் மிகவும் குறைவு. இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைக் கொண்டே மேற்கூறிய அறிஞர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலாலும் மிகச் சிறப்பான ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
அவர்களைவிட கூடுதல் ஆதாரமாக களப்பிரரின் சமகாலப்பதிவாக பூலாங்குறிச்சியில் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. இருந்தாலும் களப்பிரரின் ஊராட்சி, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் அமைப்பு, படை, சமயம் போன்றவை பற்றி மேலும் அறிந்து கொள்ள கூடுதல் சான்றுகள் தேவைப்பட்டன.
இந்நிலையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய அவர்கள் எழுதிய இந்தியத் தத்துவம் (Indian Philosophy) என்ற நூலைப் படித்த போது அவர், சாங்கியம் என்ற தத்துவத்தை எழுத மேற்கொண்ட அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்.
சாங்கியம் பற்றிய நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் சாங்கியத் தத்துவத்திற்கு எதிரான சமய தத்துவவாதிகள் சாங்கியம் பற்றிக் கூறி மறுத்த தகவல்களைத் திரட்டி, எதிரிகள் இப்படிக் கூறியிருந்தால், அத்தத்துவம் எப்படியிருந்திருக்கும் என்று கட்டமைத்து இதுதான் சாங்கியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த அணுகுமுறையைப் பின்பற்றி, நானும் களப்பிரருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்து களப்பிரர் பற்றிக் கூறிய தகவல்கள், அவர்களது கல்வெட்டுகள், செப்பேடுகளில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் திரட்டினேன். களப்பிரர் ஆட்சிமுறை, ஊர் ஆட்சி, நிர்வாகம், படை, சமயம் போன்றவை இப்படித்தான் இருந்திருக்கும் என்று எழுதினேன். களப்பிரர் என்பவர்கள் கர்நாடகப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினரும் தமிழகத்தலைவர்களும் இணைந்த குழுவினர் ஆவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஓராண்டு ஆய்வு நிகழ்த்த அளித்த அனுமதியின் பேரில் “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தேன்.
தற்போது களப்பிரரின் வீழ்ச்சி பற்றியும் பல்லவர் எழுச்சி பற்றியும் பேச வேண்டும். வீழ்ச்சி அந்த ஆட்சியின் உள்ளார்ந்த காரணிகளால் நிகழ்ந்ததா? அல்லது புறவயமாக ஏற்பட்ட படையெடுப்பா? படையெடுப்பு என்று தெரிகிறது. அதன் காரணமாக அந்த ஆட்சியில் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அமைந்ததா என்பதைக் காண வேண்டும்.
அவ்வாறு அய்ந்த போது களப்பிருக்கு ஆதரவளித்த ஊர்த்தலைவர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் சிலர் பாண்டியருக்குக் கொடுத்த ஆதரவினால் களப்பிரர் ஆட்சி கவிழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆதரவளிக்காத சிலர் தொடர்ந்து பாண்டியரை எதிர்த்து போராடிவந்தனர். இந்த இரண்டு தகவல்களும் பாண்டியர் ஆவணங்களில் கிடைக்கின்றன. தமிழகத் தலைவர்கள் களப்பிரர் ஆட்சியை வெறுப்பதற்கும் பாண்டியரை ஆதரிப்பதற்கும் என்ன காரணம். அங்கே என்ன நடந்தது?
இப்போதும் எனக்கு ஆதாரங்கள் தேவை கிடைக்காதபோது நான் வேறொரு அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்.
அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் எந்தெந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியைப் போன்ற பௌத்த ஆட்சி நடந்ததோ அந்த ஆட்சிகள் கவிழக் காரணிகளாக அமைந்தவை எவை என்று அணுக நினைத்து தேடினேன். குஷாணர் காலம் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்தது. அவர்கள் பிற சமயத்தவர் வழிபாட்டை நிறுத்தி, பௌத்த விகாரைகள், நினைவுத்தூண்கள் போன்றவற்றை அமைத்தது? வேள்வி போன்ற நடவடிக்கைகளை நிறுத்தியது. தேவாலங்களைச் செயல்படவிடாமல் தடுத்தது. ஒரே சாதியாக நிலவியது போன்ற தகவல்கள் கிடைத்தன.
இத்தகைய பௌத்த ஆட்சிகள் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டுவரை நிகழ்ந்து ஏறக்குறைய 5ஆம் நூற்றாண்டில் வீழ்ந்தன.
இதே காலகட்டத்தில் ரோமானியப் பேரரசுடன் நடந்த வணிகமும் வீழ்ந்திருக்கிறது. இந்த வீழ்ச்சியும் பௌத்த அட்சிகளின் வீழ்ச்சியும் ஒரு சேர நிகழ்ந்திருக்கின்றன.
வீழ்ந்த நகரங்களில் நடத்தில் அகழாய்வுகளில் பல்வேறு தடயங்கள் கிடைத்தன. ரோமானிய நாட்டோடு செய்த வணிகத்தால் அந்நாட்டுப் பானை ஓடுகளான ரௌலட்டட் பானை ஓடுகள், ஆம்போரா ஜாடிகள் கிடைத்தன. காசுகள் அச்சடித்தற்கான தடயங்கள், ஏராளமான காசுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ஆட்சிகளில் பௌத்த விகாரைகள் நிலவுடமை நிறுவனமாக, அதிகார மைய்யமாக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தளமாக செயல்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

Monday, November 24, 2014

T.S.Subramanian, Associate Editor, Frontline: A Man with Diverse Interests (Interview)


Picture Courtesy: The Hindu
“I would have preferred to be a teacher than a journalist as there is a lot more self-satisfaction.”

Coming from a person who has varied tastes, it is hardly surprising that he wanted to be a teacher.   T.S. Subramanian is a man of diverse interests. From nuclear science to space research to archaeology, he juggles all these and more with equal aplomb and equanimity. He has written extensively on archaeological sites like Harappa, Khirsara and Dholavira. He holds the distinction of being perhaps the only reporter to have covered every single Indian space launch till date starting from the very first in 1979. He covered the recent Mars Orbiter Mission (MOM) on November 5, 2013 which is an ambitious effort to put the Indian orbiter ‘Mangalyaan’ in the Mars orbit and ultimately land it on the planet.    Mr. Subramanian is currently the ‘Associate Editor’ of Frontline magazine in Chennai. As we sat down for the interview, I began by asking him about the details of the Mars mission.

You covered the recent ‘MOM’ launch. Can you tell us briefly about the objectives of this mission.
The Mars orbiter is a spacecraft which weighs about 1350kg. The primary objective of the mission to quote K. Radhakrishnan, ISRO Chairman, is “to put the Mars orbiter into the Martian orbit which is 20,00,000,00 to 40,00,000,00km away from the earth depending on the position of Mars with respect to the sun.” The orbiter has 5 scientific instruments on board to conduct various experiments. The first is the methane sensor to detect the presence of methane because that could determine the existence of microbial life. The second instrument is to study the contents of the upper atmosphere. Another instrument is the infrared colour camera that will take pictures of the Martian soil to find out the type of soil that exists and whether there are any craters or runnels. Yet another instrument will take the pictures of minerals on the Martian surface. The fifth instrument will check for the presence of chemicals like hydrogen and deuterium. These images will then be beamed back to the ground stations for analysis.

No country has managed to put an orbiter into the Mars orbit at the first attempt. How do you assess India’s chances and how big an achievement will it be if we manage to pull it off?

If we are successful at the first attempt, it will be a huge achievement because countries like USA, Russia, China and Japan have failed in their first attempts. If we manage to do it, it will bring a lot of credit to us but the chances are 50:50 and we need to keep our fingers crossed. The Mars orbiter has a propulsion system called ‘440-Newton’ engine which is fired to raise the orbit of the spacecraft. Four orbit-raising manoeuvres have been completed so far and two more remain. After the ‘440-Newton’ engine is fired for the sixth time on December 1, 2013, it will go from the earth-bound orbit to the sun’s orbit and coast for 300 days when it will be idling. Finally, on September 24, 2014, we will try to fire the spacecraft again so that it moves into the Martian orbit and that will be one of the biggest challenges of this mission.

There are critics who argue that the 460 crores spent by ISRO on the mission could have been put to better use like on poverty alleviation for instance and there was no need for this mission. What do you have to say to this?

It’s a stupid argument because these are science satellites and as the ISRO chairman says, ‘We gain knowledge.’ We are world leaders in application satellites and now we need to develop science satellites to know what is happening on Mars and the mission is totally justified. Suppose, we detect life on Mars, that will be a revolution.

Of all the launches that you have covered, which has been the most satisfying?

One of the satisfying missions has been the ‘Chandrayaan’ launch because it used the ‘PSLV XL’ rocket which is a more powerful version of the ‘PSLV’ rocket and it was put into the sub-geosynchronous transfer orbit. But, the most satisfying was the 1980 launch of the Rohini satellite weighing only 35kg which was the first ever successful launch by India. This was after the first launch of the same satellite in 1979 had failed.
How did you start your career covering space launches?

It was by sheer accident that I got into this field. As a cub reporter with Indian Express, I was sent to cover the first mission in 1979 at Sriharikota which was a failure. Satish Dhawan who was the Chairman of ISRO at the time said, “It was our first step, we stumbled a little but did not fall flat on our face.” In 1980, just 15 days before the launch, the chief reporter, Mr. R M Samantha who was a dynamic man with a great sense of news received a letter from ISRO asking various newspaper offices to send their reporters to come for a preview trip before the launch. So, he proffered that letter to me and said ‘Payya poyyitti va’ in Tamil which means ‘Brother, go and come,’ because as a young man, I had never been out of town. Then, I was fascinated and captivated by the facilities at the launchpad. So, that’s how I got a toehold.

How did you develop interest in other fields like nuclear power and archaeology?

I wanted to study nuclear power but I had never studied science in my life. There was a letter from the Kalpakkam Employers Union at Madras Atomic Power Station saying that they were going to hold a union meeting and they wanted coverage. I saw the letter and told the chief reporter Mr. Samantha to let me cover it and he was a magnaminous man who allowed me to go. So, I reached Kalpakkam on a Sunday and the reactor was ready but it had no heavy water. A young man explained to me that the reactor would be commissioned in another one month’s time. So, that was an explosive news and I came back to office and published it which became a front-page news and was a big scoop for me. Somebody told me that I should cover missiles 10 to 15 years ago and that’s how I got interested in missiles. Archaeology used to captivate me. There was an incident in Vellore in 1980-81. Apparently, I had brought the linga from a place called Kasba, some 5 or 6 km away from Jalakandeswarar temple and they installed it there. So, I went to the Archaeological Survey of India (ASI) office in Fort St. George in Madras and Dr.Narasimha was the Superintending Archaeologist and he gave me all the information and that’s how I got interested.

Who has been the biggest influence in your life?

N. Ram has been a big influence in the profession because he gave me a lot of freedom and allowed me to travel. Initially, Mr. Samandam who was the ‘Chief Reporter’ with the Indian Express really trained me well in a variety of beats. Later, Mr. Ram in Hindu made me aim for perfection.

Do you have any regrets in life?

I would have preferred to be a teacher than a journalist as there is a lot more self-satisfaction in that job.

Courtesy: The Hindu

Saturday, November 22, 2014

பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும்: அ. கா. பெருமாள் நேர்காணல் சந்திப்பு: மண்குதிரை தி இந்து


அ.கா.பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இவரது பங்களிப்புகள். அம்மானை வடிவத்தில் இருந்த பல நாட்டார் கதைகளை உரைநடையில் தொகுத்துள்ளார். வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து குறித்த இவர் ஆய்வுகள் முக்கியமானவை. கல்வெட்டுகள், இலக்கியங்கள் அடிப்படையில் இவர் குமரி மாவட்டத்தின் 2000 ஆண்டு வரலாற்றை எழுதியுள்ளார். அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாகர்கோவிலில் வசிக்கிறார். தற்போது கேரளத்தில் கண்ணகி வழிபாடு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். 

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்... 
 
நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பறக்கைதான் சொந்த ஊர். இளங்கலைப் படிப்பு (பி.ஏ.) முடியும் வரை அங்குதான் இருந்தேன். பள்ளிப் படிப்பு, பறக்கையிலும், சுசீந்திரத்திலும் படித்தேன். 

நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் வந்தது எப்படி? 
 
எங்கள் வீட்டுக்கு எதிரே திருவாவடுதுறை ஆதினம் மடம் இருக்கிறது. அங்கு முருகலிங்கத் தம்பிரான் என்று ஒரு தம்பிரான் இருந்தார். பத்து பன்னிரெண்டு வயதில் இருந்து அந்த மடத்தில் அமர்ந்து பாடப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அந்தத் தம்பிரானைத் தேடி ரொம்ப வயசானவர்கள் வருவார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களைக் கவனமாகக் கேட்பேன். நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு வர ஒரு விதத்தில் இதுதான் காரணம் என நினைக்கிறேன். 

உங்கள் முதல் ஆய்வு எது? 
 
1972-ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். அவர் ஒரு நல்ல நூலகம் வைத்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையை நான் முதன்முதலில் பார்த்தது அங்குதான். அவர் வீட்டில் படித்த புத்தகங்கள் ஆய்வுக்கான முனைப்பைத் தந்தன எனலாம். முதன் முதலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்தேன். 

ஆனால் ‘வையாபுரிப்பிள்ளை ஒரு தமிழ்த் துரோகி’ என ஆய்வு நிராகரிக்கப்பட்டது. அதைப் புத்தகமாக வெளியிட்டேன். திமுக தலைவர் கருணாநிதி, ‘குங்குமம்’ பத்திரிகையில், “ஒரு தமிழ்த் துரோகி குறித்து ஒரு தமிழ்ப் பேராசிரியரே எழுதுகிறாரே’ என விமர்சித்திருந்தார். அதனால் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. 

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கு எப்போது வந்தீர்கள்? 
 
முதன்முதலில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கட்டுரைகளை வெங்கட் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘யாத்ரா’ இதழில்தான் எழுதினேன். வெங்கட் சாமிநாதனின் ஊக்கத்தின் பேரில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி எழுதினேன். 

அதற்கெல்லாம் நல்ல வரவேற்பு. பேராசிரியர் நா. வான மாமலை பாராட்டினார். அதே காலகட்டத்தில் (1987) குமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் ஆய்வுசெய்தேன். நாட்டார் வழக்காற்றியல் துறையில் எனது முதல் ஆய்வு. 

இந்த ஆய்வுகள் எந்த விதத்தில் அவசியமானவை?
 
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த சாமானியனின் மனநிலையை இதுவரை எழுதப் பட்ட வரலாறு பதிவுசெய்யவில்லை. மாறாக நாட்டுப்புறப் பாட்டுகள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன. ‘ஐ பை அரைக்காபக்கா நெய், வெள்ளக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை’ என்று ஒரு நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. 

வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் விட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் சாமானிய மக்களிடம் உருவான ஆங்கில ஆட்சிக்கு எதிரான மனநிலையை இந்தப் பாடல் சித்திரிக்கிறது. கட்டபொம்மன் கதைப் பாடலிலும், மருது சகோரதர்கள் கதைப் பாடலிலும் இதை நீங்கள் பார்க்கலாம். 

வழக்காற்றியலின் வகைகள் என்னென்ன? 
 
நாட்டார் வழக்காற்றியல் என்பது சமுத்திரம். நாட்டார் ஓவியங்கள் இருக்கின்றன. இதை வைத்து 17, 18-ம் நூற்றாண்டில் ஒரு கலாச்சாரத்தை நீங்கள் உருவாக்க முடியும். ஒரு பெண் அப்போது எப்படி ஆடை அணிந்திருந்தாள், சுற்றுப்புறம் எப்படி இருந்தது என்பதை இந்த ஓவியங்கள் மூலம் நாம் அறியலாம். நம் ஊர்களில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் மேல் பகுதியில் நாட்டார் ஓவியங்கள் இருந்தன. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பல கோயில்களை இடித்து கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர். 

நாட்டார் கலைகளின் அழிவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 
 
சில தனித்துவமான கலைகள், தனிப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஆடக்கூடியவை. கணியான் ஆட்டம் ஆடுபவர்களின் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களின் சமூக வளர்ச்சி இது. இதைத் தடுக்க முடியாது. 

ஆனால் இன்றைக்குப் பறையாட்டத்தை அந்தச் சமூகத்தினர் தங்களின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள். பல்வேறு நிகழ்வுகளில் இன்றைக்கும் பறையாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு சமூகமும் கலைகளைத் தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம். 

நாட்டார் வழக்காற்றியல் எம்மாதிரியான பண்பாட்டு வரலாற்றைப் பதிவுசெய்கிறது? 
 
சாமானிய மனித இயல்புகள் எல்லாம் நாட்டார் வழக்காற்றியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மானுடவியலில் Taboo (விலக்கு) எனச் சொல்வோம். போன தலைமுறை வரை மாமியார் - மருமகன் நேர் எதிராகச் சந்தித்துக்கொள்வதோ, சகஜமாகப் பேசிக்கொள்வதோ கிடையாது. 

ஆனால் அவர்களுக்கு இடையே ரகசியமான சில ஊடாட்டங்கள் இருந்ததைக் கூறும் நாட்டார் பாடல்கள் உள்ளன. ஆக ‘விலக்கு’ எங்கு இருக்கிறதோ அங்கு ஒரு முறை தவறிய உறவு இருந்துள்ளது என இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இதை நாட்டார் வழக்காற்றியல் தவறு எனப் பதிவுசெய்யவில்லை. இயல்பென்றே சொல்கிறது. இதற்கான சான்றைக் கொலைச் சிந்துகளில் பார்க்கலாம். ஆனால் இம்மாதிரியான வாழ்வியல் ஒரு கல்வெட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை. 

கல்வெட்டு அடிப்படையிலான வரலாற்றுக்கு நம்பகத்தன்மை இல்லை என்கிறீர்களா? 
 
அது முழுமையான வரலாறு இல்லை என்கிறேன். சொல்லப்போனால் மொத்த இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு இன்னும் வெளியிடப்படவில்லை. கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் வரலாறு எழுதப்பட்டுள்ளது. 1950களுக்குப் பிறகு வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் வரவில்லை. 

நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைத் திரும்ப எழுத வேண்டுமா? 
 
வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி (Historical Reconstruction Theory) நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப் படும்பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும். 

என்ன மாதிரி விஷயங்கள்? 

 
உதாரணமாக ரஜினிகாந்துக்கு ஏன் பாலபிஷேகம் பண்ணுகிறோம்? குஷ்புவுக்கு ஏன் கோயில் கட்டு கிறோம்? இதற்கெல்லாம் காரணத்தைப் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் அறிய முடியும். கதாநாயக வழிபாடு நம்மிடம் ஆதிகாலத்தி லிருந்தே இருக்கிறது. கட்டபொம்மனையும், தேசிங்கு ராஜாவையும் கதைப்பாடல்கள் வழியாகக் கொண்டாடியதில் இதைப் பார்க்க முடியும். 

கோயில் வரலாறுகளைத் தொகுத்திருக்கிறீர்கள். அதற்கு என்ன தேவை இருப்பதாக நினைக்கிறீர்கள்? 
 
கோயில்களைப் பற்றிச் சொல்லப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை வைத்து ஜோதிடர்களும், குருக்களும் பணம் பறிக்கும் வேலைதான் நடந்து வருகிறது. 

அல்லது கோயிலுக்கு எதிராகப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒரு கோயிலில் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பல அம்சங்கள் இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுத வேண்டும் என நினைத்தேன். ஒரு சிற்பத்தில் ஒரு புராண அல்லது சமூகக் கதை இருக்கிறது. 

மண்குதிரை- தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in 
நன்றி: தி இந்து ஜூலை 19, 2014 

Tuesday, November 18, 2014

பெரியார் வழியில் தமிழ் எழுத்துச் சீரமைப்பு முனைவர் வா.செ.குழந்தைசாமி (காணொளி காட்சி)

(தமிழ் எழுத்துச் சீரமைப்பு பற்றி முனைவர் வா.செ குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் காணொளி காட்சி மூலம் தெளிவு படுத்தியவைகளை.......இங்கே பதியப்பட்டுள்ளது.)

தமிழ் எழுத்துச் சீரமைப்பு


தமிழர்கள் ஒரு மொழியினர் பல நாட்டினர் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் தங்கள் அடையளத்தை காக்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் தங்கள் அடையாளத்தை காக்கவேண்டும். தமிழர்களுக்கு நாடு அடையாளம் அன்று, மதம் அடையாளம் அன்று, அவர்கட்கு இருக்கும் ஒரே அடையாளம் தமிழ் மொழிதான். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்கவேண்டும்.


தமிழ் மொழியின் 247 எழுத்துக்களைக் கற்க 107 குறியீடுகள் தற்பொழுது தேவைப்படுகின்றன.

ஆனால் ஒரு எழுத்துக்கூட குறையாது 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும்.

இந்த மாற்றம் தான் தந்தை பெரியார் அவர்கள் முன் வைக்கும் தமிழ் எழுத்துச் சீரமைப்பின் குறிக்கோள்.

பெரியார் அவர்கள் முன்வைத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு முழுவடிவம் பெற அடுத்த கட்டம், தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியாக வரவேண்டிய சீரமைப்பு. நாம் வாழ்வது கல்வியுகம் கல்வியறிவுதான் இன்றைய வளம்.



பண்டைக்காலத்தில் கல்வியென்பதே மொழிக்கல்வியாகத்தான் இருந்தது. கல்வியென்பது பெரும்பாலும் மொழிக்கல்வியாக இருந்ததாலும் மிக மிகச் சிலரே கல்வி கற்றதாலும், மொழியைக்கற்பது அதிக நேரத்தைச் செலவிடுவது மொத்தத்தில் அன்று பெரிய சமுதாய இழப்பாக இருக்கவில்லை. இன்று பல துறைகளை கற்பதற்கு கல்வி ஒரு கருவி. நாம் நம் முன்னோர்கள் போன்று மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை செலவிடமுடியாது. எனவே மொழியைக்கற்பது எளிதாக்கப்படவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை.

கல்வியின் முதற் கட்டம் எழுதப்படிக்கத் தெரியவேண்டும். முதலில் எழுத்துகளை கற்கவேண்டும். எழுத்துகள் எளிதாக இருப்பது கற்பதை ஊக்குவிக்கும். படிக்கத் தெரிந்தால் கல்வியில் ஆர்வம் எழும்.

தமிழர்கள் இன்று உலகம் தழுவி வாழும் மக்கள். தமிழ் நாட்டின் எல்லைகள் முன்பு வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற நிலையில் இருந்தன. இன்று இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும், அதாவது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம் எந்தவொரு இடத்திற்கும் ஒரு அடையளம் வேண்டும்.

தமிழர்களுக்கு மதம் அடையாளமல்ல, சாதி ஓர் அடையாளமல்ல நாடும் அடையாளமல்ல. தமிழர்களுக்கு தமிழ் மொழி ஒன்றுதான் அடையாளம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்கள அடையாளத்தை காத்துக்கொள்ள தமிழ் கற்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். உலகத் தமிழ் குடும்பங்களும் தமிழ் கற்கவேண்டும்.

தமிழச்சாதிக்கு ஒரு வேண்டுகோள் தமிழர்களின் 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். 75 மில்லியன் தமிழர்களில் ஏறத்தாழ 15 மில்லியன் தமிழர்கள் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். தமிழர்கள் பலநாட்டினர், பல மதத்தினர், ஆனால் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர்.

இன்றையத் தகவல் தொழில்நுடப உலகில் பெரும்பான்மையினரின் ஆக்கம் ஒரு சக்திவாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மையினர் கரைந்து, கலந்து தமது அடையாளத்தை இழந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழர்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க, அடையாளத்தை நிலைப்படுத்த தமிழர்க்கு இருக்கும் ஒரேக்கவசம் தமிழ் மொழிதான்.

உலகத்தமிழினம் தமிழ் மரபோடு, தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்பு அராது வாழவேண்டும். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழில் பரிச்சயம் வேண்டும். நாம் இதுவரை கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமானால் உலகத் தமிழினம் தமிழ் கற்பது இன்றியமையாதது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் தவிர, மற்ற நாடுகளில் தமிழ் கற்பது ஒரு பொருளாதார தேவையல்ல., அரசியல் தேவையுமல்ல. நாம் கூறியிருப்பது போல் தமிழை கற்பது கடினமாக இருந்தால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் இளந்தலைமுறையினர் தமிழ் கற்க முன்வரமாட்டார்கள். 

150 முதல் ஏறத்தாழ் 200 ஆண்டுகட்குள் பிஜி, பிரையோனியா, மொரிஷியஸ் போன்ற பலநாடுகட்கு சென்ற தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். இப்பொழுது இளந்தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா போன்று அண்மைத் தலைமுறைகள் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை இழந்து வருகிறது. இவர்கள் தமிழ் கற்க தமிழர்களாய் வாழ தமிழ் கற்பதை இயன்றவரை எளிதாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழ் எழுத்துகள் கற்பதை எளிதாக்கவேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பதினைந்து இலட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதற் கட்டமாக தமிழ் எழுத்துகளை கற்கவேண்டும். எனவே பதினைந்து இலட்சம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை கற்பதை எளிதாக்குவது மாபெறும் கல்விப்பணியாகும். மாபெறும் சமூதாயச் சேவையாகும். தமிழிலுள்ள 247 எழுத்துகளை கற்பதற்கு இன்று குழந்தைகள் 107 குறியீடுகளை கற்கிறார்கள். 247 எழுத்துகளை ஒரெழுத்துகூட குறையாமல் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும். இதைச் செய்வது பெரியார் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அவசியமான கட்டம். இங்கு நாம் பரிந்துரைப்பது தமிழ் வரிவடிவத்தில் சீர்மையை, விரைமையை, கற்பதில் விரைவை ஏற்படுத்தும் மாற்றமாகும். உண்மையிலேயே மிகச்சிறிய மாற்றம். நாம் இந்த கருத்துரையை பரிந்துரைப்பது தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை குறிப்பிட வரிவடிவம் அல்லது எழுத்து அல்லது குறியீடு, ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்றை வேறுபாடின்றி ஒரு பொருள் பல சொல் என்ற வகையில் பயன்படுத்துகிறோம்.

‘’மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை’’ இது டார்வினின் தத்துவம். காலத்துக்கேற்ப எளிமை, சீர்மை, விரைவு கருதி மாற்றங்கள் நாம் விரிம்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன. ஒருமொழிக்கு ஒலி நிரந்தரமானது. எழுத்துகள் எனபவை ஒலிகளுக்கு நாம் உருவாக்கும் குறியீடுகள் மாறக்கூடியவை.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் வரிவடிவம் அதாவது எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒலி எழுத்துகளை இரு பெரும் பிரிவுகளாகப்பார்க்கலாம்.
1, முதன்மை எழுத்துகள்
2. சார்பு எழுத்துகள்
அவை பின்வருமாறு
முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
ஆய்த எழுத்துகள் 1
---------------------
மொத்த முதன்மை எ.ழுத்துகள் 31
---------------------
சார்பு எழுத்துகள்
உயிர் மெய் எழுத்துகள் 216
மொத்த தமிழ் ஒலி எழுத்துகள் 247 (முதன்மை எழுத்துகள் + உயிர்மெய் எழுத்துகள்)

ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய ஆசிய மொழிகளிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில் மட்டும் தான் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமின்றி உயிர்மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவம் கொண்ட எ.ழுத்துகள் இருக்கிறது. அதனால் எழுத்துகளின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது.

தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துகள் எளிமை, சீர்மை, விரைவு என்ற மூன்று நிலைகளிலும் பயணம் செய்து எவ்வாறு இனிவரும் காலத்திற்கு ஏற்ப அமைப்பை பெறலாம் என்பதை எடுத்துக்கூறுவதே நாம் பரிந்துரைக்கும் எழுத்துச் சீர்மையின் நோக்கமாகும்.

தமிழ் எழுத்துகளை கற்பதற்கு இப்பொழுது தேவைப்படும் குறியீடுகள் 107 அவை பின்வருமாறு.....

முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள்

அ முதல் ஔ வரையுள்ள உயிர் எழுத்துகள். இவற்றில் ஔ கூட்டெழுத்து எனவே பனிரெண்டு ஒலிகளுக்கு தேவைப்படும் குறியீடுகள் பதினொன்று.

மெய் எழுத்துகள்

க முதல் ன வரை பதினெட்டு இவற்றுடன் ஒரு புள்ளி . ஆக 19 குறியீடுகள். ஆயுத எழுத்து ஒன்று. மொத்த குறியீடுகள் முப்பத்தி ஒன்று.
சார்பு எழுத்துகள்

அதாவது உயிர் மெய் எழுத்துகள் தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் ஒரு சீர்மை இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் உள்ளது.

தமிழில் அகரமெய் தவிர்த்த ஏழு வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன. இந்த எட்டு வரிசைக்குத் தேவைப்படும் புதியக்குறியீடுகள்...

ஆகாரக் குறியீடு (‘’கால் எழுத்து’’)
எகரக்குறியீடு (‘’ஒற்றைக்கொம்பு’’)
ஏகாரக்குறியீடு (‘’இரட்டைக் கொம்பு’’)
ஐகாரக்குறியீடு (‘’இரட்டை சுழி’’)
ஆக நான்கு மட்டுமே!

தமிழில் அகர மெய்தவிர்த்த ஏழு வரிசைகளுக்கு தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன.

அகரம் ‘க’ முதல் ‘ன’ வரை
ஆகாரம் ‘கா’ முதல் ‘னா’ வரை (ஆகாரக் குறியீடு கால் எழுத்து)
எகரம் ‘கெ’ முதல் ‘னெ’ வரை (எகரக் குறியீடு ஒற்றைக் கொம்பு)
ஏகாரம் ‘கே’ முதல் ‘னே’ வரை (ஏகாரக் குறியீடு இரட்டைக்கொம்பு)
ஐகாரம் ‘கை’ முதல் ‘னை’ வரை (ஜகாரக்குறியீடு)
ஒகரம் ‘கொ’ முதல் ‘னொ’ ஒரை (ஒகரக் குறியீடு (எகரக்குறியீடு + ஆகாரக் குறியீடு))
ஓகாரம் ‘கோ’ முதல் ‘னோ’ வரை (ஓகாரக்குறியீடு (ஏகாரக்குறியீடு+ஆகாரக்குறியீடு))
ஔகாரம் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரை (ஔகாரக்குறியீடு (எகரக்குறியீடு+ வரிவடிவம்)

ஆக எட்டுவரிசைகளான 147 எழுத்துகளுக்கு நான்கு குறியீடுகள் போதும். (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஜகாரம்)

தனித்தனி வரிவடிவம் தமிழ் எழுத்துகளுக்கு இருப்பதெல்லாம் நான்கு வரிசைகளுக்கு மட்டும் தான் அது..

இகரம் ‘கி’ முதல் ‘னி’ வரை
ஈகாரம் ‘கீ’ முதல் ‘னீ’ வரை
உகாரம் ‘கு’ முதல் ‘னு’ வரை
ஊகாரம் ‘கூ’ முதல் ‘னூ’ வரை

ஆக இந்த நான்கு வரிசைகளுக்கு தேவைப்படும் எழுத்துகள் 72

இநனோடு சேர்த்து மொத்த குறியீடுகள் 107.

தற்பொழுது உள்ள வழக்கில் 247 தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு 107 வரிவடிவங்கள் தேவைப்படுகின்றது..

தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216

அதில் உயிர் மெய் இகர, ஈகார, உகர, ஊகார நான்கு வரிசைகள் தவிர மீதமுள்ள 8 வரிசைகளில் உள்ள 144 எழுத்துகளுக்குத் தேவைப்படும் குறியீடுகள் 4. (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஐகாரம்).



இதைப்போலவே இகர, ஈகார, உகர, ஊகார உயிர் மெய் வரிசைகட்கு உயிர்மைக்குறியீடுகளைப் பயன்படுத்தினால் 4 உயிர்மெய்குறியூடுகள் போதும். இதனால் 68 வரிவடிவங்கள் குறையும்.

எடுத்து வைத்த உத்தியைச்செய்லபடுத்த 4 புதிதாக நான்கு உயிர் மெய் குறியீடுகள் தேவை. நாம் பயன்படுத்தக்கவைகளாக ஒரு பரவலான கருத்துக்கணிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இவற்றின் உயிர் மெய்குறியீடுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

இதனால்,

உயிர் எழுத்திற்கும் ஆயுதத்திறகும் 12 குறியீடுகள்
உயிர் மெய் அகரத்திற்கு 18 குறியீடுகள் மற்றும்
உயிர்மெய் குறியீடுகள் ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 ஆக மொத்தம் 39 குறியீடுகள் மட்டும் போதும்.

நாம் விளக்கும் இந்த மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால்

30 முதன்மை எழுத்துகள் 9 உயிர் மெய் குறியீடுகள் ஆக 39 வரிவடிவங்களை கற்றாலே போதுமானது. இவற்றில் 4 நான்கு உயிர் மெய் குறியீடுகள் மட்டும் தான் புதியவை.. இவற்றை கற்பது மிகவும் எளிது.

நாம் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு குறியீடுகள் ஒரு கருத்துகணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை தமிழ் வடிவத்தோடு இயைந்து வருவதோடு தேவைப்பட்டால் வேண்டிய அளவு மாற்றப்படலாம். கொடுத்திருப்பது முடிந்த முடிவு அல்ல. முக்கியமாகத் தேவைப்படுவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகட்கும் மற்ற வரிசைகளைப்போலவே (ஆகார, எகர,ஏகார, ஐகார குறியீடுகளை பயன்படுத்தும்) குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்ற கொள்கையினை ஏற்பது தான்.
தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு எழுத்துக்கூட குறையாமல் எழுதுவதற்கு இந்த 30 குறியீடுகள் போதும். நாம் முன்வைத்த சீர்திருத்தத்தை ஏற்று 39 எழுத்துகளை கற்றபின் தமிழ் கணக்கை குழந்தைகள் எழுதுவது எவ்வளவு எளிது என்பதை படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது....


தமிழ் வரிவடிவத்தை கற்பதும் தொடர்ந்து தமிழ் மொழியைகற்பதும் எளிதாக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.....

உலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கிய உலகோடு தொடர்பறாது வாழ பெரிதும் உதவும்.

ஒரு மொழிக்கு உண்மையான வலிமை என்பது இலக்கணம், இலக்கியம் என்பதை விட பேசும் மக்களின் எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கையை காப்பதற்கு முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம் எளியது, சிறியது, இயற்கையானது. மண்ணில் இருக்கும் தமிழ் வானில் பறக்க இறக்கை கொடுப்பது போன்றது. நாம் எடுத்து வைத்த ஒரு எளிய, சிறிய மாற்றத்தின் மூலம் குழந்தைகள் கற்க வேண்டிய எழுத்து வடிவங்கள் அதாவது குறியீடுகள் 107 இலிருந்து 39 தாக குறைகின்றன.

இது போன்ற மாற்றம் தமிழ் மொழிக்கு புதியது அல்ல. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது. ஒலி நிரந்தரமானது. வரிவடிவம் மாறக்கூடியது.

18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் செய்த மாற்றங்கள் எகரத்திறகும் ஒகரத்திற்கும் இருந்த புள்ளிகளை நீக்கிவிட்டு எகரத்தில் ஒரு சிறு கோடு சேர்ப்பதன் மூலம் ஏகாரமாகவும், ஒகரத்திற்கு சுழிப்பதின் மூலம் ஒகாரமாகவும் அவர் உருவாக்கினார். பனை ஏடுகளில் புள்ளி வைக்கும் சிரமத்தை தவிர்க்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.


சென்ற நூற்றாண்டில் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு (படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல்) உயிர் மெய் ஆகார வரிசைகளில் மூன்று எழுத்துகளையும், உயிர் மெய் ஐகார வரிசைகளில் நான்கு எழுத்துகளையும் சீர்மையை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களினால் தமிழ் வரிவடிவம் ஒழுங்கு பெற்றதேயன்றி தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பில் உயிர் மெய் இகர, ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர, ஊகார வரிசைகளிலும் தனித்தனி எழுத்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயிர் மெய் இகர ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர ஊகார வரிசைகளிலும் மற்ற உயிர் மெய் வரிசைகளைப்போலவே உயிர் குறியீடுகளை பயன்படுத்துவதை பரிந்துரைத்திருக்கிறோம் இதனால் இந்த நான்கு வரிசைகளிலும் ஒரு சீர்மை யூனிபார்மட்டி வருகிறது. 72 வரிவடிவங்களை கற்பதற்கு பதிலாக நான்கு குறியீடுகளை கற்கவேண்டியிருப்பதால் கற்பது எளிதாகிறது. கற்பதில் விரைவு இடம் பெறுகிறது.

இப்படிபற்ற மாற்றத்தை நாம் தான் முதன் முதலில் செய்ய சொல்லுகிறோம் என்பதில்லை. நமது முன்னோர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் சான்றுகள் பின்வருமாறு....
நமது முன்னோர்கள் உயிர் மெய் இகரத்திற்கு குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை படத்திலுள்ள வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.

உயிர்மெய் ஊகாரத்திறக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.

உயிர்மெய் ஐகாரத்திற்கு குறியீட்டை தமிழக அரசு செய்த சீர்திருத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை பள்ளன் கோவில் செப்பேட்டில் காணலாம்.
உயிர்மெய் எழுத்துகளன்றி உயிர் எழுத்துக்கு கூட உயிர் குறியீட்டை பயன் படுத்தியிருப்பதை காணலாம்.

கிரந்த எழுத்துக்களுக்கும் இது போன்ற உயிர் மெய்க் குறியீடுகளை பயன்படுத்துகிறோம்.
 
இகர, உகர வரிசைகளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு உயிர் மெய் குறியீடுகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை செப்பேடுகளில் கண்டோம். என்வே எவ்வித தயக்கமுமின்றி இந்த நான்கு வரிசைகட்கும் சீரமைக்க உயிர் மெய்குறியீடுகளை பயன்படுத்தலாம் என்பது இயல்பாகவே தோன்றும் சீரமைப்பாகும்.

இதில் புரட்சிகரமான அம்சம் ஏதுமில்லை. இதனால் ஏற்படும் நன்மை தான் புரட்சிகரமானது. இதில் கற்பனை செய்யப்படும் அளவில் தமிழுக்கு ஏற்படும் இ.ழப்பு என்று ஏதுமில்லை.

டார்வினின் தத்துவம் வலியது வெல்லும் என்பதன்று. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உயிர் வெல்லும் மாற மறுப்பது மறையும் என்பது தான்.

நாம் இங்கு எடுத்து வைத்திருக்கும் மாற்றம் நடைமுறைப்படுத்தபட்டால் பெரியார் அவர்கள் எடுத்துவைத்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை பெறும்.

நாம் கூறும் மாற்றம் மிகவும் எளியது. அளவில் சிறியது ஆலின் விதை போன்றது. அதன் பயன் உண்மையிலேயே ஆல் போன்றது.
தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்  

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிய கவிஞன் கணியன் பூங்குன்றன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நாம் குளோபல் வில்லேஜ் அதாவது குவலயக்கிராமம் என்று பேசுகிறோம். உலகு தழுவி வாழும் தமிழினம் இன்று அந்த குவலயக்கிராமத்தில்... குவலயக்குடும்பமாக... குளோபல் பேமிலியாக உருவாகியிருக்கிறது. தமிழர்களை உலகம் இன்று ஒரு மாகாணத்தில் வாழும் மக்களாக பார்க்கவில்லை. பொதுவாக உலகுத் தழுவி வாழும் மக்களாக, குறிப்பாக தெற்கு ஆசிய மக்களாக பார்க்கிறார்கள்.

இந்திய மொழிகளில் வங்கமும் உருதும் அணைடை நாடுகளில் ஆட்சி மொழிகள். அவற்றை விடுத்து மற்ற மொழிகளை மட்டும் நாம் இந்திய மொழிகள் என்று குறிப்பிடுவோம்.

சீன வானொலி 42 மொழிகளில் ஒளிபரப்புகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மட்டும் தான். காரணம் தமிழ் தெற்கு ஆசிய மொழி. சௌத் ஏசியன் லேங்குவேஜ் என கருதப்படுகிறது. உண்மையில் இன்று அது உலக குடிமக்களின் மொழி.

பிபிசி வானொலி உலகு அறிந்தது. அது 32 மொழிகளில் ஒளிபரப்புகிறது. பிபிசி வானொலியும் இந்தாய மொழிகளில் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறது. முதலில் கூறிய அதே காரணங்களுக்காகத்தான்.

அண்மைக்காலம் வரை யூனஸ்கோ நிறுவனம் கூரியர் என்ற மாத இதழை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு வந்தது. அதில் இடம் பெற்ற இந்திய மொழிகள் இந்தியும் தமிழும் தான்.

இன்று தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் உங்கத் தமிழர் செய்திகள் என்ற செய்தி ஒளிபரப்புச் செய்கின்றன. சில தினசரி பத்திரகைகள் வாரம் ஒருமுறையாவது உலகத் தமிழர் செய்திகள் என்று வாரம் ஒருமுறையாவது செய்திகள் வெளியிடுகின்றன. இவையனைத்தும் தொடர வேண்டுமானால், வலிமைப்படவேண்டுமானால், விரிவடைய வேண்டுமானால், உலகத் தமிழ் மக்கள் தமிழோடு, தமிழ் மரபோடு தொடர்பு உடையவர்களாக வாழ.வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உலகத் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. எழுத்து சீர்திருத்தம் தமிழ் கற்க பெரியளவில் எளிதாக்கும். குறிப்பாக உலகத்தமிழர்கள் தமிழ் கற்பதை எளிதாக்கும். அவர்கள் தமிழ் கற்பது தமிழ் இனத்தின் எதிர்காலத்திறகு வளம் சேர்க்கும், வலிமை சேர்க்கும்.
சங்ககாலக் கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான். தற்காலத் தமிழர் புவனமும் மானுடர்க்கு பொது என்று வாழ்கிறார்கள்.

தமிழர்கள்
ஒரு மொழியினர்,
பல நாட்டினர்,
எல்லா நட்டிலும் சிறுபான்மையர்.
தமிழர்கட்கு தாங்கள் இன்று பன்னாட்டுச் சிறுபான்மையர் என்ற பார்வை வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.

புவனமும் மானுடர்க்கு பொதுவெனும் தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்.
ஒரு மொழிக்கு உண்மையான வலிமை
இலக்கணம் இலக்கியம் என்பதை விட
பேசும் மக்களின் எண்ணிக்கைதான்.
அந்த எண்ணிக்கையை காப்பதற்கு
முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம்.
எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம்
எளியது, சிறியது, இயற்கையானது.
மண்ணில் நடக்கும் தமிழ் வானில் பறக்க
இறக்கை கொடுப்பது போன்றது.

http://www.tamilvu.org/esvck/index.htm

.........முனைவர் வா.செ.குழந்தைசாமி