Showing posts with label Jainism. Show all posts
Showing posts with label Jainism. Show all posts

Monday, August 3, 2015

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiShHBN1Ks-D-DkDkNYhfzBhyphenhyphenxaY6i8VUPwc9USvVWSuCn077hfRrFY12Sat7R0w4yTq3VZYQqHs30iOKZ-_8eKsooSDzG8MAwEnhBE3FWewVhtRcqcN1YOVBXtY5MJhV1DTUsHKYcq6AQ/s1600/vandavasi1.jpg 



வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தார்கள். இதுகுறித்து மேலும் விசாரித்தப்போது பல புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. வந்தவாசி-செய்யாறு சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் மலையில் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டோம். இதில் அம்மலையில் சமணர் படுக்கைகள் இருப்பது தெரியவந்தது.

இந்த மலையில் உள்ள சமணப்படுக்கைகள்  சுமார் 2000 ஆண்டுகளுக்கும் தொன்மையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மலையில் பெருங்கற்காலத்திற்குரிய கல்வட்டங்களும், கற்காலக் கருவிகள் செய்யப்பட்டதற்கான மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைக் கொண்டு மலையின் கிழக்குப் பகுதியை ஆய்வுசெய்தபோது அங்கு படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCn8QX5ejZchINLmKqLM4juPUSm1CDzAtHexXqjLWz-6FCGgvpyql7Ewt8F9vjYHQIV8YYcEUrNO8sMXu0nA850BshrxM_F-k58uyxd-SEoX9VdFxOsIw1ZH_Ykds22VX7_We4QS84xSM/s1600/krish.jpg

சாய்வான அமைப்பை கொண்டுள்ள சமணப் படுக்கைகள் கிழக்கு நோக்கி உள்ளன. இந்த படுக்கை தளத்தின் அகலம் 170 செ.மீ., நீளம் 150 செ.மீ. ஆக உள்ளது. இதை பார்க்கும்போது 4 முதல் 5 துறவிகள் உறைவிடமாக கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZTudPgntcPQqdpZMyvUsEoo4aHlE5G2QHJLgFev-mhtkyDKd_quoOqTx6O5ewZwkKzlPKboB2r8F3mlp1pYT0RlEWHbOmuZj74lGqOmFIXVJxqEVAYGfRHqR1J0IXmWEHlln5g5luCUA/s300/images6.jpeg

இந்த பாறையில் தரைப்பகுதியை துறவிகள் இயற்கையாகவே பயன்படுத்தி உள்ளனர். இந்த பயன்பாட்டினால் பாறையின் தரைப்பகுதி நன்றாக தேயந்திருப்பதை பார்க்கும்போது துறவிகள் பல நூற்றாண்டுகள் இதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.

கீழ்த்தளப் பாறையின் நடுப்பகுதியில் 33 செ.மீ. நீளமும், 21 செ.மீ.அகலமும் கொண்ட ஒரு செவ்வக் குழி காணப்படுகிறது. இதற்கு தெற்காக இப்போது விளையாடும் ஆடுபுலி ஆட்ட கட்டம் காணப்படுகிறது. இதுபோன்ற கட்டங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் இதர பகுதிகளில் உள்ள படுக்கைகள் போலவும் காணப்படுகிறது.

இம்மலையில் காணப்படும் பாறைகளின் மேல் பல இடங்களில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுப் பாறை மீது மழை, காற்று, வெயில் படுவதால் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. கல்வெட்டின் மீது ஊரார்கள் தங்கள் பெயரையும் செதுக்கி வைத்துள்ளதால் கல்வெட்டின் தகவலை முழுமையாக அறிய முடியவில்லை.


சில கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது தமிழ் (பிராமி) வடிவ  எழுத்துகளையும், வட்டெழுத்துகளையும் உடையதாக உள்ளன. இக்குன்றை சார்ந்த பிற பகுதிகளில் தாழ்வான குகைத்தளங்கள் காணப்படுகிறது. படுக்கை குன்றுக்கு தெற்கில் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த ஏரிப்பகுதியில் முதுமக்கள் தாழி புதைக்கப்பட்டுள்ளன.

இந்த தாழிகள் மழை, வெள்ளத்தால் சிதைவு ஏற்பட்டு உடைந்து காணப்படுகின்றன. எனவே இந்த ஏரிப்பகுதியில் துறவிகள் இறந்தபிறகு இதுபோன்ற தாழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வு மேற்கொண்டால் தமிழர் பண்பாட்டுக்குரிய அரிய செய்திகள் வெளிப்படும் என்பதில் அய்யமில்லை.
வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiZWV_iJ6D2CJyNDpSgNmBmcCTFC8cATEnAE9jHQgF1tk_QW2b9P92NcxVlMysMRi9F1lbyoUmt1CGvejcLcGgsAChwJyeB_ZSVtfGPTgfhwNgp0ADEU9Bxoxgc42zLAWijQIgBroqkWL/s1600/1.bmp

இந்தக் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுகின்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதவளகிரீஸ்வரர், ஸ்ரீவிநயாகர் ஆலயங்களில் தனித்தனி கொப்பரைகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

To Refer Original Click:
நன்றி கோ.ஜெயகுமார்.  தமிழ்மணம். ப்ளாக்ஸ்பாட்

Thursday, December 4, 2014

களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும் சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி சமூக ஆய்வு வட்டம்












ளப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்
சிறப்புரை: தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பத்மாவதி 

நான் தொல்லியல் துறையில் மாணவியாய் சேர்ந்த போதிலிருந்தே களப்பிரர் வரலாற்றில் எனக்கு ஒர் ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதுபற்றி யோசித்தும் படித்தும் வந்தேன். ஆய்வு செய்ய நினைத்தேன்.
மு.அருணாசலம், மயிலை சீனி.வேங்கடசாமி, நடன.காசிநாதன் ஆகியோர் களப்பிரர் பற்றி எழுதிய நூல்களைப் படித்தேன். பிறர்நூல்களையும் படித்தேன்.
களப்பிரர் வரலாற்றில் அடுத்த கட்டத்திற்குப் போகமுடியவில்லை. வரலாற்றுத் தடயங்கள் மிகவும் குறைவு. இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைக் கொண்டே மேற்கூறிய அறிஞர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலாலும் மிகச் சிறப்பான ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
அவர்களைவிட கூடுதல் ஆதாரமாக களப்பிரரின் சமகாலப்பதிவாக பூலாங்குறிச்சியில் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. இருந்தாலும் களப்பிரரின் ஊராட்சி, நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் அமைப்பு, படை, சமயம் போன்றவை பற்றி மேலும் அறிந்து கொள்ள கூடுதல் சான்றுகள் தேவைப்பட்டன.
இந்நிலையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய அவர்கள் எழுதிய இந்தியத் தத்துவம் (Indian Philosophy) என்ற நூலைப் படித்த போது அவர், சாங்கியம் என்ற தத்துவத்தை எழுத மேற்கொண்ட அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்.
சாங்கியம் பற்றிய நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் சாங்கியத் தத்துவத்திற்கு எதிரான சமய தத்துவவாதிகள் சாங்கியம் பற்றிக் கூறி மறுத்த தகவல்களைத் திரட்டி, எதிரிகள் இப்படிக் கூறியிருந்தால், அத்தத்துவம் எப்படியிருந்திருக்கும் என்று கட்டமைத்து இதுதான் சாங்கியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த அணுகுமுறையைப் பின்பற்றி, நானும் களப்பிரருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்து களப்பிரர் பற்றிக் கூறிய தகவல்கள், அவர்களது கல்வெட்டுகள், செப்பேடுகளில் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் திரட்டினேன். களப்பிரர் ஆட்சிமுறை, ஊர் ஆட்சி, நிர்வாகம், படை, சமயம் போன்றவை இப்படித்தான் இருந்திருக்கும் என்று எழுதினேன். களப்பிரர் என்பவர்கள் கர்நாடகப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினரும் தமிழகத்தலைவர்களும் இணைந்த குழுவினர் ஆவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஓராண்டு ஆய்வு நிகழ்த்த அளித்த அனுமதியின் பேரில் “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தேன்.
தற்போது களப்பிரரின் வீழ்ச்சி பற்றியும் பல்லவர் எழுச்சி பற்றியும் பேச வேண்டும். வீழ்ச்சி அந்த ஆட்சியின் உள்ளார்ந்த காரணிகளால் நிகழ்ந்ததா? அல்லது புறவயமாக ஏற்பட்ட படையெடுப்பா? படையெடுப்பு என்று தெரிகிறது. அதன் காரணமாக அந்த ஆட்சியில் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அமைந்ததா என்பதைக் காண வேண்டும்.
அவ்வாறு அய்ந்த போது களப்பிருக்கு ஆதரவளித்த ஊர்த்தலைவர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் சிலர் பாண்டியருக்குக் கொடுத்த ஆதரவினால் களப்பிரர் ஆட்சி கவிழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆதரவளிக்காத சிலர் தொடர்ந்து பாண்டியரை எதிர்த்து போராடிவந்தனர். இந்த இரண்டு தகவல்களும் பாண்டியர் ஆவணங்களில் கிடைக்கின்றன. தமிழகத் தலைவர்கள் களப்பிரர் ஆட்சியை வெறுப்பதற்கும் பாண்டியரை ஆதரிப்பதற்கும் என்ன காரணம். அங்கே என்ன நடந்தது?
இப்போதும் எனக்கு ஆதாரங்கள் தேவை கிடைக்காதபோது நான் வேறொரு அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும்.
அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் எந்தெந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியைப் போன்ற பௌத்த ஆட்சி நடந்ததோ அந்த ஆட்சிகள் கவிழக் காரணிகளாக அமைந்தவை எவை என்று அணுக நினைத்து தேடினேன். குஷாணர் காலம் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்தது. அவர்கள் பிற சமயத்தவர் வழிபாட்டை நிறுத்தி, பௌத்த விகாரைகள், நினைவுத்தூண்கள் போன்றவற்றை அமைத்தது? வேள்வி போன்ற நடவடிக்கைகளை நிறுத்தியது. தேவாலங்களைச் செயல்படவிடாமல் தடுத்தது. ஒரே சாதியாக நிலவியது போன்ற தகவல்கள் கிடைத்தன.
இத்தகைய பௌத்த ஆட்சிகள் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டுவரை நிகழ்ந்து ஏறக்குறைய 5ஆம் நூற்றாண்டில் வீழ்ந்தன.
இதே காலகட்டத்தில் ரோமானியப் பேரரசுடன் நடந்த வணிகமும் வீழ்ந்திருக்கிறது. இந்த வீழ்ச்சியும் பௌத்த அட்சிகளின் வீழ்ச்சியும் ஒரு சேர நிகழ்ந்திருக்கின்றன.
வீழ்ந்த நகரங்களில் நடத்தில் அகழாய்வுகளில் பல்வேறு தடயங்கள் கிடைத்தன. ரோமானிய நாட்டோடு செய்த வணிகத்தால் அந்நாட்டுப் பானை ஓடுகளான ரௌலட்டட் பானை ஓடுகள், ஆம்போரா ஜாடிகள் கிடைத்தன. காசுகள் அச்சடித்தற்கான தடயங்கள், ஏராளமான காசுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ஆட்சிகளில் பௌத்த விகாரைகள் நிலவுடமை நிறுவனமாக, அதிகார மைய்யமாக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தளமாக செயல்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

Thursday, September 25, 2014

Map for Jain pilgrimage centres


Map for Jain pilgrimage centres: 
(Tamil nadu & Kerala)
(Not fully updated)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
வலைத்தளம் = http://rprtravelogue.blogspot.com/

Wednesday, September 24, 2014

தமிழ்ச் சமணம் !: தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு! இரா.பானுகுமார்

தமிழ்ச் சமணம் !: தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!: சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். ... சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : ஆசிரியர் தமிழ் இலக்கியம், இலக்கணம், நீதி நூல்கள், இசை, நடனம், நாடகம், கணிதம் போன்ற தலைப்புகளில் மிக நீண்ட பட்டியலைத் தருகிறார்